Tuesday, January 31, 2012

உங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன்

உங்கள் ஜாதகத்தில்  எந்த இடத்தில உள்ளார் சூரியன்

 சூரியன் மேஷத்தில் இருந்தால் என்ன பலன் ?

    ஜாதகன் வல்லவன்,கீர்த்தயுடயவன்,அற்பதனவன்,நடையில் வல்லவன் ,ஆயுதம் எடுத்து சஞ்சரிபன் ,பூரணதனம் உடையவன் .


சூரியன் ரிஷபத்தில் இருந்தால் பலன் என்ன ?

வச்திரப்ரியன் சுகந்த பூசனம் உடையவன்,பணியாற சீவித்தான்,ஸ்திரிகளை ஜய்யிபவன் .

சூரியன் மிதுனத்தில் இருந்தால் என்ன பலன்?

 சூரியன் ஒருவரது ஜாதகத்தில் மிதுனத்தில் நின்றால் ஜோதிடம் , வித்தை இவற்றில் சிறந்து விளங்குவான் .

கடகத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

    சூரியன் கடகத்தில் நின்றால் திரவியமில்லதவன்,சூரன்,பர காரியம் செய்பவன் ,அறிவுஉடயவன்.

சிம்மத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

மலைகள் ,வனங்கள் ,பசுக்கள் உடையவன் அர்த்தம் உடையவன் ,வீரம் உடையவன், ஆவன் ஜாதகன் 

கண்ணியில் சூரியன் இருந்தால் என்ன பலன் ?

 அட்சர வித்தை உடையவன் சிற்பி,கதை காவியங்கள் அறிவான் ஜாதகன் 

துலாமில்  சூரியன் இருந்தால் என்ன பலன் ?


சுரர் சேர்வை செய்வான்,வலி நடையயோன் பொன் வணிகன் ,நிசரோடு சிநேக முடையவன் 

விருச்சகத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?


கோபி,விசாரிக்காது காரியம் செய்பவன் ,திருவியம் தேடி கூடுபவன்,


தனுசில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

வித்துவன்களால் கொண்டடபடுபவன் ,பாடகன்,கருகவைதியன் திர்கன் சிற்பி 

மகரத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

ஜாதகன் தனம் இல்லாதவன் உழுதான்,பல திரவியம் உடையவன் ,அகத வணிகத்தை செய்பவன் மூடன் .

கும்பத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

மிடியன்,நீசன்,புத்திர பாக்கியம் இல்லாதவன் ஆவன் ஜாதகன் 

மீனத்தில் சூரியன் நின்றால் என்ன பலன் ?

தோய செல்வன்,வந்ப்பதால் செல்வம்  உடையவன் ஆவன் இந்த ஜாதகன் 







  



Sunday, January 15, 2012

திருமண தோஷங்கள்



தோஷங்களும் பரிகாரங்களும்


                  திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.


திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.


ஜாதக தோஷங்கள் என்ன?


                           பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.


செவ்வாய் தோஷம்:


                         ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.


ராகு - கேது தோஷம்:


                       லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.


மாங்கல்ய தோஷம்:


                        இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8&ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.


சூரிய தோஷம்:


                          ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.




களத்திர தோஷம்:


                          களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.


                          மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.
தோஷமும் பரிகாரங்களும்:




செவ்வாய் தோஷம்:


                          செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.


ராகு-கேது தோஷம்:


                           திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.


சூரிய தோஷம்:


                             ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.


களத்திர தோஷம்:


                          சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Friday, January 13, 2012

உங்கள் நட்சத்ரதிற்கு எந்த திசையில் வீடு கட்டலாம்?

















உங்கள் நட்சத்ரதிற்கு எந்த  திசையில் வீடு கட்டலாம்?



கிழக்கில் வீடு கட்ட:

ரோகினி,மிருகசீரிஷம்,புனர்புசம்,பூசம்,ஆகியவை உத்தமம்.

தெற்கில் வீடு கட்ட:

மகம்,சுவாதி,அஸ்தம்,உத்திரம்,ஆகியவை உத்தமம்.

மேற்கில் வீடு கட்ட:

உத்திராடம்,திருவோணம்,மூலம், ஆகியவை உத்தமம்.

வடக்கில்  வீடு கட்ட:

அவிட்டம்,உத்திரட்டாதி,சித்திரை,சதயம் ஆகியவை உத்தமம்.

எல்லா திசைகளிலும் வீடு கட்ட 

ரேவதியில் எல்ல திசைகளிலும் வீடு கட்டலாம்.








உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம்

உங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம் 





விசாகம் ,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ,மேஷம்,ஆகிய ஆறு ராசிகள் ஜன்ம லக்னமாக இருப்பின் கிழக்கில் வீடு கட்டலாம் .

ரிசபம்,மிதுனம்,கடகம்,சிமம்,கன்னி,துலாம்,இவை லக்னமாக இருப்பின் மேற்கு திசையில் வீடு கட்டலாம்.

சிம்மம்,கன்னி,துலாம் ,விருச்கம்,தனுஷ்,மகரம் லக்னமாக இருப்பின் வடக்கு திசையில்  வீடு கட்டலாம்.

வீடு கட்ட உகந்த நட்சத்திரங்கள்:

ரோகினி,திருவோனோம்,ரேவதி,மிருகசீரிஷம்,அனுஷம்,பூசம்,உத்திரம்,உத்திராடம்,உத்திரட்டாதி ,ஆகிய நட்சதிரங்கள்ளில் வீடு கடலாம்.

சித்திரை,மூலம்,புனர்புசம்,சுவாதி,அவிட்டம்,சத்தியம்,அஸ்தம்.ஆகியவை மத்திமம்.

மற்றவை விலகதகவை.

எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கலாம்.


எந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கலாம்.


கார்த்திகை ,மூலம்,அஸ்தம்,அனுஷம்,மகம்,சதயம் ,இந்த நட்சத்திரத்திலும் தங்கத்தை கொடுக்க கூடாது .

சாதாரண நட்சத்திரங்கள் :

   விசாகமும் ,கார்த்திகையும்   

உக்கர நட்சத்திரங்கள் :


    பூரம்,புராடம் ,புராட்டதி மகம்,பரணி,

திக்சன நட்சத்திரங்கள் :
   
     மூலம்,ஆயில்யம்,கேட்டை ,திருவாதிரை,

லகு நட்சத்திரங்கள் :

      அஸ்வினி,பூசம்,அஸ்தம்,

Thursday, January 12, 2012

எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்

எந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம் 

தங்கம் வாங்குவதற்கு உகந்த காலம்

   குரு வர்கோதமம் பெற்றுரிக்க புதனும் சுக்கிரனும் கேந்திரத்தில் இருக்கும் படியான லக்னத்தில் தங்கத்தை வாங்கி சேர்த்தால் ஒன்று பன்மடங்காகும் 

இதுபோலவே சந்திரன் தன உச்ச அம்சமான லக்னத்தில் இருக்க அதற்கு 7 ம்இடத்தில குருவும் இருக்க செல்வங்களை சேமித்தல் தங்கம் ,வெள்ளி,ரத்தினங்கள்,ஆபரணங்கள் முதலானவை ஒன்றுக்கு பலமடங்ககும் 

   தங்கம் தானியங்கள்,ரத்தினம் இவைகளை  சேமிக்கும் விசயத்திலும் சம்பாதிக்கும் விசயத்திலும் லக்னத்தில் குரு இருந்தால் மென்மேலும் விருத்தியாகும் .

லக்னத்தில் குருவும் இரண்டாமிடத்தில் சுக்கிரனும் பத்தாமிடத்தில் சந்திரனும் பதினொன்றாம் இடத்தில புதனும் இருந்து அப்டிபட்ட நேரத்தில் செல்வதினை செமப்து நல்லது.

வியாழகிழமை தினம் லக்னத்தில் குருவும் பதிநொனில் சூரியனும் ஆறில் சனியும் இருந்தால் அதுசமயம் பணியாட்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள வேண்டும் .

 லக்னத்தில் சுக்கிரனும் பத்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் இருக்க பித்தளை வெண்கலம் ஆகியவற்றை வாங்கி சேமித்தல் ஒன்று கோடி மடங்காகும் 

வெள்ளி,தங்கம்,நவரதின்னங்கள் சேமிக்க :

 தங்கம் ,வெள்ளி,செம்பு,இரும்பு,முத்து,பவளம்,வைரம் முதலானவற்றை செல்வம் சேமிபுகென குறைபட நட்சத்திரத்தில் வாங்குவது மென்மேலும் செழிக்கும்

 வெள்ளியை வெள்ளி சாமன்களை சேமிக்க

       சனிக்கிழமையில் ரோஹிணியில் சந்திரனும் குரு கும்பத்தை பார்க்கும் சம்யம வெள்ளி பொருட்கள் வாங்க பெருகும் .

சுக்கிரன் உச்சமான லக்னத்திலும் குரு 7 லிலும் 5 இடத்தில் சூரியனும் இருக்கும் சமயத்தில் வெள்ளியை சேமித்தல் பலமடங்காக பெருகும் .



.

வாசனை திரவியங்கள் சேமிக்க :

      லக்னத்தில் குருவும் 12 ல் சந்திரனும் இருக்கும் பொழுது கற்புரம் அகில்,சந்தனம் ,கல்பம்,முதிலிய வாசனை சாமான்களும் ,மாலைகளையும் வாங்கி சேர்க்க மென்மேலும் வளர்ச்சி அடையும்.


நூலகம் அமைக்க :

புத்தகங்களை சேமிப்பது ஆவணங்கள் பெறுவதற்கு புதன் உச்சத்தில் இருப்பது அல்லது வியாழன் அன்று உச்ச லக்னத்தில் இருப்பது நல்லது .

தெய்வ வழிபாடு

தெய்வ வழிபாடு 



 பாசம் பற்று ஆசை இவற்றையெல்லாம் விடுதல் பொருட்டு அனைத்திற்கும் முதல்வனாகிய கடவுளை பற்றும் முறையே வழிபாடு எனப்படும் 


பொதுவாக வழிபாடு இஅரண்டு வகைப்படும் அவை பொது மற்றும் சிறப்பு ஆகும் .


பொது வழிபாடு இறைவனது அருலனை ஆகிய அறத்தின் வழி நிற்றல் இது பொது ஒழுக்கம் எனவும் படும் .இது இல்லறம் துரவரம்ம் என இருவகைபட்டு முறையே அன்பையும்,அருளையும் அடிப்படையாக கொண்டு நிகழதகாக நுல்களில் விதிக்க்கபடும்
இயமம,நியமம் என்பவை இந்த பொது ஒழுக்கத்தில் அடங்கும்..


கொல்லாமை ,வாய்மை,கல்லாமை,வஞ்சகம் இல்லாமல் இருத்தல் அளவருந்து உண்டால் சுத்தம்,தவம், மனம் உவந்து இருத்தல் ,கடவுள் கொள்கை ,பொருளை நல்ல வழியில் ஈடுத்தல் உயர்ந்தோரை மதித்தல் பிறப்பு ,செல்வம்,அதிகாரம்,என்பவற்றால் செருகுராமல் அடங்கி ஒழுகுதல் ,இறைவனின் திருபெயரை உச்சரித்தல் ஆகியனவை ஒழுக்கம் எனபடும் . 


ஒழுங்குமுறை நான்கு வகை படும் :


        சரியை ,கிரியை ,யோகம்,.ஞானம் .ஆகியவை ஆகும் 


சரியை :
      முதலவன் கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் காணுமாறு போல உயிர்களின் அறிவு படிமுறையால் வளர்ந்து பெருகி மேலோங்கி முடிவில் நின்று முதல்வனை பற்றும் இயல்புஉடைய்த்து .


கிரியை :
    தொண்டு நெய்ரிசியில் பென்று வந்தோருக்கு பக்குவ முதுர்ச்சி பெற்று அறிவு மிகுந்து அன்பு மிகும் .இவரு உணர்வும் அன்பும் முதிர பெற்றோர் முதல்வனுடைய ஆற்றலை குறிக்கும்.

சுத்திகள் :
     
      சிவ பூஜைக்கு முன் அங்கமாக பூத சுத்தி ,தான சுத்தி,திரவிய சுத்தி ,மந்திர சுத்தி லிங்க சுத்தி என்படும் .