Tuesday, October 2, 2012

உங்களுடைய ஜாதகத்தில் புதன் சனி கூடியுள்ளதா ?


                                                       

என்னுமால் சனியைக்கூடி இருந்திட மகவாய் வந்தோன்,
மண்ணுலகத்தில் பலபேரை மயக்கியே மோசம் செய்து ,
துன்னுமா பொருள்கை கொண்டே சுகமடைந்திடுவானாகும்,
உன்னத குருவின் வார்த்தை உட்கொள்ளான் கர்வியாமே.

                         புதன் சனி ஒன்று சேர்ந்து இருக்கையில் பிறந்தவன் உலகத்தில் உள்ள பல பேர்களையும் மயக்கி மோசம் செய்து அவர்கள் கையிலிருக்கிற பொருளை தான் கைகொள்வானாம். சுகமுள்ளவனாம். சமர்த்தன், குருமார்கள் வார்த்தையை தள்ளி தன மனம் போல நடப்பவன். கருவமுள்ளவனாய் இருப்பான் என்பதாம்.

No comments:

Post a Comment