Wednesday, October 3, 2012

கற்றோரை கற்றோரே காமுறுவர் !!

                                 காவே சிந்தாமணியே என்று வீணர் கடைத்தலை போய்,
                                 பாவே யுரைத்தும் பரிசளியார் நின் பதமுதவாய்,
                                 தேவே யசுரர் கிளையோடு மாளச் செகுன்தவை வெற,
                                 கோவே கதிரைப் பதிவாழ் குமர குருபரனே !!

                                கலைஞானமும், புலவர் சிறப்பும் அறியாத வீணர் தம் கடை வாயிலிற் போய்  " கற்பக சோலையே ! சிந்தாமணியே !! என்று இனிய பாக்களை பாடியுரைத்தாலும் சிறிதும் பரிசளித்து மகிழார், மாளக் கொன்ற கூறிய வேலாயுதத்தை உடைய, கதிர்காமத்தில் வாழும் குமர குருபரனே ! நின்பாதத்தில் வாழும் இன்பமாகிய பதத்தை எனக்கு அருள்வாயாக !!

No comments:

Post a Comment