Thursday, June 12, 2014

Guru Peyarchi Palangal 2014 for all Rasi's

Sunday, June 8, 2014

வயதுக்கு மூத்த பெண்ணை மணம்புரிவது ஏன் ?

                         


                         






                           

                                                                             
                                                                                                                                                                                                  பொதுவாகவே தமிழ் கலாச்சாரத்தில் மணமகனை விட வயதில் மூத்த பெண்ணை மணப்பது என்பது சாதரணமாக இல்லை ஆனாலும் ஒரு சிலர் இது போன்ற வயது மூத்த பெண்ணை மனம் புரிகின்றனர். இதற்க்கு என்ன காரணம் என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கமாகும். 

                               மனைவி ஸ்தானமான எழாமிடத்து அதிபதி சனி பகவானுடனோ அல்லது ராகு கேதுவுடனோ சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் அவர்களுக்கு தனது வயதை விட மூத்த பெண்ணே மணமகளாக அமைய வாய்ப்பு வலுவாக உண்டு. வயது மூத்த பெண்ணை மணக்கலாமா என்றால் அது அவரவர்களின் மனம் ஒத்து போவதை பொருத்ததே தவிர வேறு ஒன்றுமில்லை.  

                                                                             

                                  இந்த உதாரண ஜாதகத்தை பார்க்கலாம். இவருக்கு மீனம் லக்னமாகவும் மகரம் ராசியாகவும் உள்ளது. லக்னத்திற்கு ஏழாவது வீட்டின் அதிபதியான புதன் ஆறாமிடத்ததிபதியான சூரியன் உடனும்  கேதுவுடனும் சேர்ந்து நான்காமிடத்தில் உள்ளது. கேது தன்னைவிட வயது மூத்தவர்களைக் குறிக்கக் கூடிய கிரகமாகும் அதனால் தான் கேதுவை ஞான மோட்ச காரகன் என்கின்றனர். இந்த கேது பகவான் தன்னை விட வயது மூத்த ஞானியரையும் ஆன்மீகவாதிகளையும் குறிப்பவர் ஆவார்.  இந்த ஜாதகர் தன்னை விட ஏழு வயது மூத்த பெண்ணை தனது தகப்பனாரின் பேச்சையும் கேட்டகாமல் மனம் முடித்துவிட்டார். ஏன் தனது தந்தையில் சொல்லையும் தட்டி விட்டு திருமணம் முடித்துள்ளார் ? எழாமிடது அதிபதி கேதுவுடன் மட்டுமல்லாது சூரியனுடனும் சேர்ந்துள்ளார் அல்லவா சூரியன் தந்தையை குறிக்கும் கிரகமல்லவா ? அந்த சூரியன் கேதுவுடன் சேர்ந்து கிரகண தோஷத்தில் உள்ளார். எனவே எல்லா விஷயங்களிலும் தந்தை சொல்லை தட்டாத இந்த மகன் தனது திருமண விஷயத்தில் எல்லை மீறி சென்றுவிட்டார். 

                              தற்போது இந்த ஜாதகருக்கு நடப்பது ராகு திசை ராகு புத்தி என்பதாலும் இந்த ராகுவானவர் அஷ்டமாதிபதியான சுக்கிரன் சாரம் பெற்றுள்ளதாலும், குடும்ப ஸ்தானத்தில் குளிகன் இருப்பதாலும் , குடும்ப ஸ்தானாதிபதி நீசம் பெற்றுள்ளதாலும் இந்த குடும்பமானது சிறக்கவில்லை என்பதும் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பதும் தனிக் கதை. இருப்பினும் தனது வயதைவிட மூத்த பெண்ணை மணக்க கேது பகவான் காரணமாக அமைந்துவிட்டார் என்பதே உண்மை. 

                                                                       

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பது உண்மை.

Tuesday, May 13, 2014

ஆலங்குடி குரு பகவான் - கவி காளமேகம் பார்வை

                                                                                   

குரு பகவானின் ஸ்தலம் ஆலங்குடியாகும். குரு பகவான் சிவ பெருமானின் அம்சமானவர், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டவர் என்பதும் உமையம்மை அந்த விஷத்தை தன்னுடைய கையால் இறைவனனின் கழுத்தில் வைத்து கண்டத்திலேயே அதாவது இறைவனின் கழுத்திலேயே விஷத்தை தங்க வைத்ததால் இறைவனின் கழுத்தானது நீல நிறமாக மாறிவிட்டது ஆகவே இறைவனுக்கு திரு நீலகண்டேஸ்வரர் என்ற திருநாமம் வந்தது என்பதும் பரம்பொருள் விடத்தை உண்ட நேரமே பிரதோஷ காலம் என்பதும் நாமறிந்த உண்மையாகும். 

ஆலகால விஷத்தை பருகிய சிவபெருமானின் அம்சமான குரு பகவானை தனது தமிழால் சொல்மாலை சூட்டும் கவி காளமேகம் தனக்கே உரிய நையாண்டியுடன் புனைந்துள்ள கவியானது இன்றும் படித்து இன்புறத் தக்கது. 
" ஆலன்குடியான் " என்றால் ஆலங்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவா ! என்றும், ஆலகால விஷத்தை பருகாதவன் என்றும் இரு பொருள் பட தமிழ் விளையாடுகிறது காளமேகத்தின் நாவில். அதனால் தானோ என்னவோ கவிக்கொரு காளமேகம் என்று சொலவடை இன்றளவும் வழங்கி வருகிறது
காளமேகத்தில் கவிச்சுவையை இந்த ஒளிக்காட்சியில் ருசிக்கலாம்.

                                                                     

Thursday, May 8, 2014

பெண்களுக்கும் தார தோஷம் உண்டா ?

                                


                                      ஆண்களுக்கு திருமணம் ஆகவில்லையா ? அவருடைய ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது எனவே கால தாமதமாக திருமணம் செய்யுங்கள். அப்போது மறு திருமண யோகம் என்னும் இரண்டாவது விவாகத்தை தடுத்து விடலாம் என ஜோதிடர்கள் சொல்கின்றனர். இதே போல பெண்கள் ஜாதகத்திலும் திருமண தோஷம் இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்கும் என்று சொல்ல வழி உண்டு. பின்வரும் உதாரண ஜாதகத்தில் லக்னம் மேஷம் ராசி மிதுனம் இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்கிரனே எழாமிடத்து அதிபதியாகவும் வருவதோடு மட்டுமல்லாமல் களத்திர காரகனாகவும் உள்ளார். ஆக மூன்று வகையான முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த சுக்கிரன் உதாரண ஜாதகத்தில் நீசம் பெற்ற நிலையில் உள்ளார். 



                                                     பெண்களின் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் என்பது எட்டாமிடமாகும். இந்த எட்டமிடத்தை சனீச்வர பகவான் தனது பத்தாம் பார்வையாக பார்கிறார். அதே இடத்தை செவ்வாய் தனது ஏழாம் பார்வையாக பார்கிறார். ஆக சனி மற்றும் செவ்வாயின் பார்வை ஒரு ராசியில் விழுமானால் அந்த இடமானது நசிந்துவிடும் என்பது ஜோதிட கூற்றாகும். இங்கு சனி செவ்வாய் பார்வை மாங்கல்ய ஸ்தானத்தில் விழுவதால் இந்த பெண்ணிற்கு இரண்டு முறை திருமணம் முடிந்து மூன்றாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு உள்ளார்கள்.

                                                          எட்டாமிடம் என்பது ஆயுள் ஸ்தானமும் கூட இந்த பெண்ணிற்கு இள வயது என்பதால் ஆயுளில் தோஷம் ஏற்ப்படுத்தவில்லை.மாறாக இருமுறையும் மாங்கல்ய தோஷத்தை ஏற்ப்படுத்தி விட்டது. இந்த மாதிரியான ஜாதகங்கள் ஒரு நல்ல மாப்பிள்ளை ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்க வந்தால் இது பொருத்தம் இல்லை என்று கூறும் நிலைக்கு ஜோதிடர்கள் வந்து விடுவர். ஆனால் பொருத்தம் பார்க்க வந்தவர்களோ நாங்கள் பார்த்த பக்கம் இந்த இரண்டு ஜாதகத்திற்கும் பொருத்தம் உள்ளது அதிலும் பத்து பொருத்தமும் உள்ளது எனவே நல்ல முறையில் திருமணம் செய்யலாம். என்று கூறுகின்றனர். இவர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்பதே ஒரு கலையாகி விடுகிறது.

                                       




                                                                                             

Tuesday, May 6, 2014

கௌரவத்தை குலைக்கும் காமம்







                       காதல் கண்களை மறைக்கும் என்பது பழமொழி அதேபோல காமம் என்பது தனது நிலை மற்றும் குல பெருமை போன்றவற்றை மறக்க செய்யும் என்பது பலவகையிலும் நாமறிந்த ஒன்றே. இருப்பினும் இந்த உறவு சார்ந்த சிக்கல்களில் தவறு செய்பவர்கள் அது கணவனாயினும் அல்லது மனைவியாயினும் தவறு நடக்கும் வரை எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் ஒரு ஆர்வத்தினாலும் ஆசையினாலும் அளவு கடந்த விருப்பத்தினாலும் தங்களது பெருமை நிலை வசதி போன்ற எல்லாவற்றையும் மறந்து விடுகின்றனர். அனால் அந்த தவறு நடந்தபின் தங்களது உண்மை நிலை தெரியவரும்போது குறிப்பாக தவறுக்கு துணை செய்த தனது இனையாலோ அல்லது கணவர் / மனைவியாலோ தங்களது சந்தேக பார்வைக்கு ஆளாகும்போது அந்த சூழ்நிலையில் இருந்து தப்புவதற்கு செய்யும் முயற்சிகளின் போதோ அவர்கள் வடிக்கும் கண்ணீரும் படும் துயரமும் அளவிடற்கரியது. இந்த நிலை ஏன்  ஏற்ப்படுகிறது ? இம்மாதிரியான உறவு சிக்கல்களில் மீண்டு வர முடியுமா ? என்பதை ஜோதிட ரீதியாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். 

                        பின்வரும் உதாரண ஜாதகத்தை பார்க்கவும். சிம்ம லக்னம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் கொண்ட இந்த சாதகமானது ஒரு பெண்மணியின் சாதகமாகும். இவர் ஒரு பொறுப்பான அரசு அதிகாரியாவார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர், ஆனால் தனது வயதைவிட குறைந்த வயதுடைய கல்வியறிவு இல்லாத ஓர் மெக்கானிக் வேலை செய்யும் ஒருவருடன் தொடர்பு ஏற்ப்பட்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவு சென்றவர். ஏன்  இந்த நிலைக்கு ஆளானார். 


              சுக ஸ்தானம் எனப்படும் நான்காவது ராசியான விருச்சிகத்தில் சுக்கிரன் செவ்வாய் மற்றும் கேது பகவான் உள்ளனர். நான்காம் வீட்டில் உள்ள கேது தனது தாயாரின் உடல் நலனில் தொல்லை தரும் அமைப்பாகும். தயார் இல்லை என்னும் போது  வீடு வாகனம் அல்லது தனது உடல் நலனில் பிரச்சனைகளை உருவாக்க வேண்டும். ஆனால் இவருடைய பதவி மற்றும் வருமானம் போன்றவற்றால் இருப்பிடமும் அதாவது வீடு மற்றும் வாகனம் போன்றவற்றில் சிறப்பான நிலையில் உள்ளார். தனது வயது மற்றும் வசதிகளால் உடல் ரீதியாக பெரிய தொல்லை என்று எதுவும் இல்லை. ஆனாலும் நான்காமிட கேதுவானவர் தனது பலன்களை கொடுக்க வேண்டுமல்லவா ? ஒரு பலூன் நிறைய தண்ணீரை நிரப்பி அதன் வாய்ப் பகுதியை கையில் பிடித்துக் கொண்டு தரையில் ஓங்கி அடித்தால் அதன் வாய் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது இல்லை. எதன்  வழியாகவும் வெளியேறலாம் அல்லவே அதைப் போல ஐந்தாமித்தில் ஆட்சியாக உள்ள செவ்வாய் சகல ஐஸ்வர்யத்தை கொடுத்தாலும் கேதுவானவர் உறவு சிக்கல்லை ஏற்ப்படுத்தி விடுகிறார். 

              பொதுவாகவே கடக லக்னம் அல்லது சிம்ம லக்ன ஜாதகர்களுக்கு சனி பகவானானவர் மறைவிடத்தில் நின்றால் மட்டுமே சிறப்பான பலன்களை செய்வார். அவர் ஏழாமிடத்தில் ஆட்சியாகும் போது நிம்மதி அற்ற குடும்ப வாழ்க்கையை ஏற்ப்படுத்தி விடுகிறார். அதிலும் குறிப்பாக இந்த அமைப்பை பெற்றவர்கள் சனி திசையில்  இருந்தால் நிச்சயமாக புயல் வீசும் குடும்ப அமைப்பை பெற்று விடுகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் இது போன்ற உறவு சிக்கல்களில் சிக்கிக் கொள்ள காரணமாக அமைகிறது. இந்த உதாரண ஜாதகத்தில் ஏழாமிடத்தில் சனி பகவான் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

              நாலமிட கேதுவானவர் மற்றும் காம காரகனான சுக்கிரன் சுகாதிபதியான செவ்வாய் சேர்க்கை தவறான வழிகளில் சுகத்தை தந்து விடுகிறார். இருப்பினும் லக்னாதிபதியான சூரியன் நீசம் பெற்று உள்ளது பலருக்கும் புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தாலும் கௌரவ பங்கத்தை ஏற்ப்படுத்தி விடுகிறார். தனது தவறான உறவுக்காக சில பல லட்சங்களை செலவு செய்து மெக்கானிக்கை பொருளாதார ரீதியாக உயர்த்தி இருப்பினும் அவரிடம் யாருக்கும் தெரியாமல் தினமும் அடியும் உதையும் வாங்கும் நிலையில் இருந்து வருகிறார். தன்னை பார்த்து அனைவரும் எழுந்து நின்று மரியாதை தரத் தக்க நிலையில் இருந்தாலும் தன்னை விட வயதில் குறைந்தவனிடம் தனது கௌரவத்தை அடகு வைக்கும் நிலையில் இருப்பதற்கு லக்னாதிபதியான சூரியன் நீசம் பெற்று இருப்பது  முக்கியமான காரணமாகும். 

                தவறான வழிகளில் சுகத்தை தந்த கேது ஒரு விஷ கிரகம் என்பதால்  ஒரு நிலையில் விஷத்தை குடித்து தற்கொலை செய்ய தூண்டியும் விடுகிறார். ஆனால் ஆயுள் காரகனான சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பது இவரின்  ஆயுளை பறிக்க விடவில்லை.எனவே மனதளவில் நடை பிணமாக வலம் வரும் இவரின் வாழ்க்கை பரிதாபமான ஒன்றேயாகும். 



Monday, May 5, 2014

பகட்டுக்கும் உடைக்கும் மட்டுமே மரியாதை !!

                                                                             


ஒரு மனிதனின் பெருமை புகழ் அவனுடைய அறிவு சார்ந்த விஷயம் மட்டுமே தவிர அவனுடைய தோற்றம் நடை உடை பாவனைகள் அல்ல என்பது நம்  எல்லோரும் அறிந்த விஷயமே என்றாலும் ஒருவருடைய தோற்றம் மிக சிறப்பாக இருந்தாலே நம்மையும் அறியாமல் அவர்மீது மதிப்பும் மரியாதையும் ஏற்ப்பட்டு விடுகிறது என்றால் அது மிகையல்ல. இருப்பினும் தோற்றம் மட்டுமே முழுமை அல்ல என்பது அறியத்தக்கது. சங்க காலம் தொட்டே தோற்றத்திற்கு மதிப்பு அளிக்கும் கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமே இந்த தமிழ் புலவரின் கவியாகும். தனது வருத்தத்தையும் புலமை திறத்தால் எவ்வளவு அழகுபடுத்திச் சொல்கிறார் என்பது ரசிக்கத்தக்கது. 


Saturday, May 3, 2014

மணமுறிவு ( விவகாரத்து ) தவிர்க்க முடியுமா ?

 
                
                           விவகாரத்து என்பது தற்போது சாதாரணமாக ஆகிவிட்டதோ என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் உண்டு. காரணம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் இந்த அளவு விவகாரத்து இருந்ததா என்றால் இல்லை என்பதே நிலையாகும். ஆனால் அன்று இருந்ததை விட வாழ்வியல் கல்வியாலும் வசதி வாய்ப்புகளும் உயர்ந்தே உள்ளன. அப்படியானால் நாம் முன்னேற்றப் பாதையில் அல்லவா செல்ல வேண்டும்.  எப்படி கல்வி தரம் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம் உயர்ந்து உள்ளதோ அதே போல விவகாரத்தும் உயர்ந்தே உள்ளது. இதற்க்கு என்ன காரணம் ? என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கமாகும். 

                    " கற்றலின் கேட்டல் நன்று " - என்ற முதுமொழிக்கேற்ப உதாரண ஜாதகத்திர்க்கான விளக்கத்தையும் மணமுறிவுக்கான காரணத்தையும் பின்வரும் ஒளிக்காட்சி மூலம் காணலாம்.




Tuesday, April 29, 2014

உங்கள் குழந்தை ஆர்கிடெக்ட் ஆக முடியுமா ?



                  பொறியியல் துறையில் எவர் க்ரீன் டிப்பார்ட்மெண்ட் என்பது கட்டடக்கலையும் மெக்கானிக்கல் துறையும் தான். இந்த கட்டிடக் கலையில் சிறப்பு பிரிவாக உள்ளது  ஆர்க்கிடெக்ட் என்னும் பிரிவாகும் இப்படிப்பை கிட்டத்தட்ட ஒரு டாக்டர் படிப்பு என்றே கூறலாம். ஐந்து ஆண்டுகளாக படிக்கும் இந்த படிப்பானது வருமானத்தை கோடிகளில் கொட்டித்தரும் படிப்பாகும். சாதரணமாக சிவில் இஞ்சினியர்கள் பெரும் வருமானத்தை விட பெருமளவில் சம்பாதிக்கும் வாய்ப்பு இந்த ஆர்கிடெக்ட்  படிப்பவர்களுக்கு உண்டு என்றால் அது மிகை அல்ல. மேலும் இந்த படிப்பானது வேலை வாய்ப்பை வெளிநாடுகளில் பெருமளவில் பெற்றுத்தரும் ஒரு கல்வியாகும்.

                  ஜாதக ரீதியாக இந்த ஆர்கிடெக்ட் படிக்க வாய்ப்பு உள்ளதா என்று காண்பதே இந்த பதிவின் நோக்கமாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஜாதகங்கள் இந்த ஆர்கிடெக்ட் படித்தவர்களின் சாதகமாகும். .



உதாரணம் : 1


                       மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த சாதகமானது ஒரு ஆர்கிடெக்ட் சாதகமாகும். இந்த ஜாதகத்தில் தொழில் காரகனான சனி பகவான் செவ்வாயுடன் சேர்ந்து லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் நிற்கிறது இதில் சனி பகவான் சத்திரனுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார். எனவே சனி வலுப் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல் கடக ராசியில் உள்ள சனி ஜலராசியில் உள்ளார். கடகம் நீர் ராசியாகும். எனவே இவர் கடல் கடந்து சென்று பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார். மேலும் பரிவர்த்தனையில் கும்பத்திற்கு சனி செல்வது ஒரு நீர் ராசியாகும். எனவே இந்த இரண்டு ராசிகளின் படி  இந்த ஜாதகர் வெளிநாடு செல்வது உறுதியாகிறது. இந்த சனியுடன் சேரும் செவ்வாயானவர் இந்த ஜாதகத்திற்கு லாபாதிபதியுமாகிறார். இந்த லாபாதிபதி தொழில் காரகனான சனியுடன் சேருவது தொழிலில்  சிறப்பான இடத்தைக் கொடுக்கும். மேலும் கட்டிட கலைக்கு பூமி காரகனான செவ்வாய் சனியுடன் சேர வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். இங்கு சனி செவ்வாய் சேர்க்கையுடன் சனி பகவான் அதி பலம் பெற்றுள்ளார். எனவே இந்த ஜாதகர் கட்டிடக்கலை படிக்க வாய்ப்பு உண்டானது. 




உதாரணம் 2: 

                        இந்த ஜாதகத்தில் கட்டிடக் கலை படித்துள்ள இவருக்கு சனி பகவான் செவ்வாயுடன் சேரவில்லை. இருப்பினும் உயர் கல்வி ஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தில் செவ்வாய் உள்ளதால் கட்டிடக்கலை தொடர்பான படிப்பு அமைந்தது. ஆயினும் தொழில் காரகனான சனியுடனோ அல்லது தொழில் ஸ்தானாதிபதியான சந்திரனுடனோ இந்த செவ்வாய் தொடர்பு பெறவில்ல அதாவது இந்த கிரகங்கள் ஒன்று சேரவும் இல்லை. ஒன்றை ஒன்று பார்க்கவும் இல்லை. இது எதை குறிக்கிறது ? இந்த ஜாதகர் தொழில் கல்வி படித்தாலும் தான் படித்த படிப்பை விட்டு விட்டு பைனான்ஸ் தொழில் செய்கிறார்.  தொழில் காரகனான சனியுடன் செவ்வாய் சேர்ந்து இருப்பது இந்த நிலையை  கொடுத்தது.மேலும் சனி நின்ற வீட்டு அதிபதி ஆட்சி பெறுவதால் இவர் ஈடுபட்டுள்ள தொழிலில்  முதன்மையான நிலையை எட்ட முடிந்தது. கல்லூரியில் சேருவதற்கு முன்னமே இவருடைய தொழிலை ஜாதக ரீதியாக நிர்ணயித்து விட்டு பின்னர் படிப்பை தேர்ந்து எடுத்திருந்தால் எவ்வளவோ கால விரயம் பணவிரையத்தைத் தடுத்து இருக்கலாம். 



                                    பொதுவாகவே பெற்றோர்கள் தனது குழந்தைகள் விரும்பும் படிப்பை படிக்க வைப்பதே  சாலச் சிறந்ததாகும், பிரியம் இல்லாமல் அது இஞ்சினியர்  படிப்பாக இருந்தாலும் படிக்க வைத்தால் அது அவருக்கு மட்டுமல்லாது பல பேருக்கும்  பெரிய ரிஸ்க்காக ஆகிவிடும். எனவே பிள்ளைகளுக்கான கல்வி துறையை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் பெற்ற மதிப்பெண்கள்  அவர்களது விருப்பம் மற்றும் நமது நிதி நிலைமை நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை சரியானதா என்ற ஜோதிட ரீதியான விபரம் ஆகியவற்றை சிந்தித்து தெரிந்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



                                            ENGINEERS MAKE THE WORLD


Monday, April 28, 2014

எட்டாமிடத்தில் ராகு தரும் பலன் !!



                            ஒரு ஜாதகத்தில் எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்தில் ராகு பகவான் இருந்தால் என்னமாதிரியான பலன்களை செய்வார் என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். பின்வரும் இந்த ஜாதகத்தை கவனிக்கவும் இதில் ரிஷப லக்னம் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் லக்னத்திற்கு எட்டாமிடமான தனுசில் ராகு அமர்ந்துள்ளார். ராகுவானவர் தனது திசையில் எப்படி பலன் கொடுத்திருக்கிறார் என்பதை பின் வரும் ஒளிக்காட்சியில் காணலாம்.







Friday, April 25, 2014

உங்கள் குழந்தைக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா ?


                                    பிள்ளைகளை பெற்ற அனைவருக்கும் உள்ள பொதுவான மற்றும் நியாயமான ஆசை என்பது தனது பிள்ளைகளை டாக்டர் ஆகவோ அல்லது பொறியியல் வல்லுனாராகவோ உருவாக்க வேண்டும் என்பதே. இதிலும் டாக்டர் படிப்பிற்கு உள்ள மவுசே தனி தான். லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்கக்கூட பிள்ளைகளைப் பெற்றவர்கள் தயாராக உள்ளனர் என்றால் இந்த படிப்பின் மீதுள்ள கிரேஸை என்னவென்று சொல்வது. இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் ரஷ்யாவிற்கு பிள்ளைகளை அனுப்பி டாக்டர் ஆக்குவதும் தெரிந்த ஒன்றே. நமது நாட்டின் டாக்டர் படிப்பை நிறைய வெளிநாடுகள் அங்கீகரிக்கவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்தியாவில் டாக்டர் படிப்பு படித்துவிட்டு இங்கிலாந்தில் அல்லது அமெரிக்காவில் டாக்டர் ஆக பணிபுரிய முடியாது என்பது கவனிக்கத்தக்கது. இம்மாதிரியான நாடுகள் நாம் வழங்கும் மருத்துவ பட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்பதால் மீண்டும் அவர்கள் நாட்டில் இதே பட்டப்படிப்பை படிக்க வேண்டும். பின்னர் தான் டாக்டர் ஆக தொழில் செய்ய முடியும். 

                                     ஆனால் நமது நாட்டில் செவிலியர் பட்டம் பெற்றவர்கள் இம்மாதிரியான நாடுகளில் நேரடியாக மருத்துவ துறையில் பணிபுரிய முடியும் என்பதும் இதை சட்ட ரீதியாக அங்கீகரித்து உள்ளனர் என்பதும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றேயாகும். 

                                     ஜாதக ரீதியாக ஒருவர் டாக்டர் படிப்பு படிக்க முடியுமா ? என்பதை முன்கூட்டியே அறிய முடியுமா ? என்றால் நிச்சயமாக முடியும் என்பதே பதில் ஆகும். இந்த பதிவில் கொடுத்துள்ள ஜாதகங்கள் அனைத்தும் பிரபலமான மருத்துவர்களின் ஜாதகமே ஆகும். டாக்டர் ஆகும் யோகத்தை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பின்வரும் ஒளிக்காட்சியில் காணலாம்.




      
                    மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண ஜாதகத்தில் தொழில் காரகனான  சனி பகவான்  கும்பத்தில் ஆட்சி பெற்றுள்ளார். விருச்சிகத்தில் ஆட்சியாக உள்ள செவ்வாய் தனது நான்காம் பார்வையாக சனி பகவானை பார்க்கிறார். ஆக இந்த ஜாதகத்தில் சனி செவ்வாய் பார்வை பலம் பெற்றுள்ளது காரணம் இரு கிரகங்களுமே ஆட்சி பெற்று உள்ளது.  இந்த சனி செவ்வாய் சம்பந்தமே இந்த  ஜாதகரை ஒரு புகழ் பெற்ற மருத்துவராக பணியாற்றும் வாய்ப்பை பெற்று தந்துள்ளது. மிகவும் கை ராசியான மருத்துவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். 


                      மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை கவனிக்கவும், இந்த ஜாதகத்தில் ஆறாமிடத்தில் ராகுவுடன் உள்ள சனி பகவானை சிம்ம செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக பார்க்கிறார் . இதிலும் சனி செவ்வாய் சம்பந்தம் பெறுகிறது, ஆனால் சனியுடன் ராகுவும் உள்ளார். செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்ப்பது மட்டுமல்லாமல் செவ்வாய் நின்ற வீட்டதிபதியான சூரியன் நீசம் பெற்று உள்ளதால் செவ்வாய்க்கு நைசார்கிக பலன்களில் ஸ்தான பலம் இல்லாமல் இருக்கிறார். ஆக சனியும் பாதிப்பில் செவ்வாயும் பாதிப்பில் நிர்ப்பதால் இவர் மருத்துவராக பட்டம் பெற்றாலும், மருத்துவ துறையில் சிறக்கவில்லை. மாறாக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றுகிறார். பலமற்ற சனி செவ்வாய் சேர்க்கையாக இருந்தாலும், மருத்துவ துறையானது இவருக்கு கைவல்யம் ஆனாலும் ஒரு தொழிலாக மருத்துவத்தை இவரால் அணுக முடியவில்லை. இருப்பினும் மருத்துவ கல்வி பெறுவதற்கு இந்த சனி செவ்வாய் சம்பந்தமே போதுமானதாக இருக்கிறது.


              மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தை பார்க்கவும், இதில் சனி பகவான் ராகுவுடன் சேர்ந்து உச்சம் பெற்று தந்து எழாம் பார்வையாக கடகத்தை பார்க்கிறார், அதே கற்கடக ராசியை சனியானவர் ரிஷபத்திலிருந்து சந்திரனுடன் சேர்ந்து தந்து மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். ஆக இங்கு சனி செவ்வாய் சம்பந்தம் என்பது லக்னத்திற்கு ஏழாமிடமான கடக ராசியில் பார்வை பலனாக உள்ளது. ஆனால் சனி செவ்வாய் நேரடியாக சம்பந்தம் பெறவில்லை, எனவே இவரது பெற்றோரின் விருப்பப்படி லச்சக்கணக்கில் பணம் செலவு செய்து மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி படித்துள்ளார். இருப்பினும் ஒரு கௌரவத்திற்காக மருத்துவர் பட்டம் பெற்றாலும் இவர் தனித்து மருத்துவ தொழில் செய்ய துணிவில்லாமல் ஒருவரிடம் அடிமையாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்.  இதற்க்கு காரணம் சனியும் செவ்வாயும் பலம் பெற்று சம்பந்தம் பெற்றால் மட்டுமே மருத்துவத்தில் பரிமளிக்க முடியும் என்பதே விதியாகும். இது போன்ற ஜாதகங்களை அவர்கள் விருப்பத்திற்கு படிக்க வைத்திருந்தால் இவருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கும். இவருக்கு விருப்பமான ஒரு துறையில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருப்பார். எனவே மருத்துவ கல்லூரியில் தந்து குழந்தைகளை சேர்க்கும் முன்னர் அவர்களின் விருப்பத்தை கேட்டு வாழ்க்கை வழியை நிர்ணயிப்பது என்பது மிக முக்கியமானது ஆகும்.

                           மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்று கல்வி காரகனான புதனுடன் சேர்ந்து மகர ராசியிலிருந்து எட்டாம் பார்வையாக லக்னத்திற்கு ஒன்பதாமிடமான சிம்மத்தை பார்க்கிறார், இந்த சிம்ம ராசியானது லக்னத்திற்கு ஐந்தாமிடத்திர்க்கு ஐந்தாமிடமாகும் அதாவது உயர் கல்வி ஸ்தானமான மேஷத்திற்கு ஐந்தாமிடமாகும். ஆக உச்ச நிலை பட்டம் பெரும் அமைப்பாகும் அதற்க்கு ஏற்றார்போல வித்தை ஸ்தானமான குரு பகவான் தனது ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று உச்சம் பெற்ற அசுர குருவுடன் சேர்ந்து உள்ளார். மேலும் ஏழாமிடமான மிதுனத்தில் தனித்த நிலையில் உள்ள சனீச்வரன் தனது மூன்றாம் பார்வையாக செவ்வாய் பார்வை பட்ட சிம்மத்தை பார்க்கிறார். எனவே சனி செவ்வாய் பார்வை சம்பந்தம் இங்கு ஒன்பதாமிடமான சிம்மத்திற்கு கிடைகிறது. மேலும் இங்கு சனி செவ்வாய் நேரடியாக சம்பந்தம் பெறவில்லை எனவே இந்த ஜாதகர் நில ராசியான மகரத்தில் செவ்வாய் நிர்ப்பதாலும் புதன் சேர்க்கை பெறுவதாலும் சித்த மருத்துவத்தில் உயர் பட்டம் பெற்றுள்ளார். இங்கு புதன் தமிழ் வித்தைக்காரன் என்பது குறிபிடத்தக்கது. எனவே இவருக்கு தமிழ் வைத்தியமான சித்த வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற ஏதுவாக இவரது ஜாதகம் இருக்கிறது. 


                          மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் கும்பத்தில் கிரக கூட்டத்தில் உள்ள செவ்வாய் சிம்மத்தில் உள்ள சனியால் நேரடியாக பார்க்கப் படுகிறார். இவரும் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். அரசு வேலையில் உள்ள இந்த ஜாதகத்திர்க்கான மருத்துவ படிப்பு என்பது  இவரது பெற்றோர்களால் பெரும் பொருள் செலவு செய்து மருத்துவராக படிக்க வைத்து உள்ளனர். இவரும் உச்சம் பெற்ற குரு தந்து ஏழாம்  பார்வையாக லக்னத்தை பார்ப்பதால் தனது துறையில் புகழ் பெற்று விளங்குகிறார். இங்கு சனி செவ்வாய் பார்வையானது நேரடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நேரடியாக சனி செவ்வாய் சம்பந்தம் இல்லாவிட்டால் இவரும் சித்த மருத்துவம் அல்லது ஓமியோபதி மருத்துவம் போன்ற பட்ட படிப்பை பெற்று இருப்பார். இந்த நேரடியான சனி செவ்வாய் சம்பந்தம் இவருக்கு அல்லோபதி மருத்துவ பட்டத்தை கொடுத்து, அரசு வேலையையும் தந்து, புகழ் பெற்ற மருத்துவராகவும் பெயர் எடுக்க வைத்து சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுத்த இந்த சேர்க்கையானது இரண்டாமிடம் மற்றும் எட்டாமிடமாகப் போனதால் குடும்ப வாழ்க்கை என்பது கானல் நீராகிப் போனது என்பதே சோகமான ஒரு செய்தியாகும். இருபினும் தந்து துறையில் அழியா இடம் பெற்ற இந்த ஜாதகம் ஒரு சிறந்த மருத்துவர் என்றால் அது மிகையல்ல.


                              மேலே கொடுக்கப்பட்ட ஜாதகத்தில் சனி பகவான் ஏழாமிடத்தில் கடகத்தில் நின்று லக்னத்தை முழுப் பார்வையாக பார்கிறார்,  லக்னத்தை  செவ்வாய் தனது எட்டாம் பார்வையாக பார்க்கிறார். இந்த ஜாதகர் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார், சனி செவ்வாய் சம்பந்தம் ஆனது லக்னத்திற்கு ஏற்ப்பட்டதால் தொழில் துறையில் பிரகாசிக்க முடிந்த இவரது சாதகமானது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சமாளிக்க முடியாமல் தனது குழந்தையுடன் தனியாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இருப்பினும் இந்த ஜாதகர் தனது தொழிலில் முன்னிலையில் உள்ளார்.  ஆக சனி செவ்வாய் சம்பந்தம் எப்படியும் மருத்துவத்துறையில் முன்னிலைக்கு வழிவகுக்கிறது என்றால்  அது மிகையல்ல. 



                              பொதுவாகவே பெற்றோர்கள் தனது குழந்தைகள் விரும்பும் படிப்பை படிக்க வைப்பதே  சாலச் சிறந்ததாகும், பிரியம் இல்லாமல் அது டாக்டர் படிப்பாக இருந்தாலும் படிக்க வைத்தால் அது அவருக்கு மட்டுமல்லாது பல பேருக்கும்  பெரிய ரிஸ்க்காக ஆகிவிடும். எனவே பிள்ளைகளுக்கான கல்வி துறையை தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் பெற்ற மதிப்பெண்கள்  அவர்களது விருப்பம் மற்றும் நமது நிதி நிலைமை நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை சரியானதா என்ற ஜோதிட ரீதியான விபரம் ஆகியவற்றை சிந்தித்து தெரிந்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை வளமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

                                       மருத்துவத்துறையாக  இருந்தாலும் மற்று எந்த துறையாக இருந்தாலும் உங்களது தேர்வு சரியானதாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்களது வாழ்க்கைச் சக்கரமும் சிக்கலாகி பெற்றோர்களின் பொருளாதாரம் எதிர்பார்ப்பு  போன்றவையும் பாதிக்கப்படும் என்றால் அது மிகையல்ல. எனினும் பிள்ளைகளின் சரியான துறை என்பது அவர்களின் வாழ்க்கையைக் செதுக்கும் சிற்பக்கலையே ஆகும். எத்தனயோ குழந்தைகள் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுவிட்டு சாதாரணமான வேலைகளை செய்வதை அல்லது சொந்த தொழில் செய்வதை பெரும்பான்மையாகக் காணலாம். அலோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்ற ஒருவர் சுமார் பத்து  இடங்களில் மருத்துவ மனை வைத்து எடுத்துவிட்டு, பல மருத்துவ மனைகளில் வேலைபார்த்தும் சரியாக வராமல் முறுக்கு,மிச்சர்,மிட்டாய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு மாருதி வேனில் சென்று  வியாபாரம் செய்யும் ஒரு மருத்துவரும் இருக்கிறார் என்பது ஆச்சரியம் அளிக்கும்  ஒருன்றேயாகும். இதெல்லாம் சரியான பாதையை தேர்வு செய்யாததால் ஏற்ப்படும் இழப்பேயாகும். 


திருச்சிற்றம்பலம் 

Sunday, April 6, 2014

ராகுவும் குடும்ப வாழ்க்கையும்

             

                                                                       


                         ஜாதகத்தில் ராகு அல்லது கேது பகவான் லக்னத்திற்கு இரண்டாமிடத்திலோ அல்லது எழாமிடத்திலோ இருந்தால் அது சர்ப்ப தோஷம் பெற்ற ஜாதகம் எனப்படுகிறது. இவ்வாறு ராகு கேது உள்ள ஜாதகங்களுக்கு இன்னொரு நாக தோஷம் உள்ள ஜாதகத்தை மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையை ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். இது எப்படி செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்று சொல்கின்றோமோ அதே போல இந்த சர்ப்ப தோஷத்திற்கும் சொல்வது என்பது வித்தியாசமான நிபந்தனை ஆகும். இதற்கும் ஒரு படி மேலே போய்  ஒரு சில ஜோதிடர்கள் நீங்கள் பார்க்கும் வரனுக்கு இரண்டாமிடத்தில் ராகு அல்லது எட்டமிடத்தில் ராகு இருக்க வேண்டும் அதே போல சனி ஐந்தாமிடத்தில் இருக்குமாறு ஜாதகம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்வதோடு மட்டுமல்லாமல் ஜாதகம் பார்க்க செல்பவர்கள் கைகளிலேயே குறித்தும் கொடுத்து அனுப்புகிறார்கள். 

         வரன் தேடும் பெற்றோர்களும் இந்த குறிப்புகளை கைகளில் வைத்துக்கொண்டு திருமண தகவல் மையங்களில் கடலில் ஊசியை தொலைத்து விட்டு தேடுவதுபோல தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.ஒவ்வொரு பெற்றோரும் இந்த வரன் அமைந்து திருமணம் கை கூடுமா அல்லது அந்த வரன் அமைந்து திருமணம் கூடுமா ? என்ற மிகுந்த எதிர்பார்ப்போடு பரிதவிப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடிய நிகழ்வாகும். மிகுந்த சிரமத்திற்கு பின்னர் ஒரு வழியாக எழில் ராகு அல்லது எட்டில் கேது இரண்டில் சனி என்பது போன்ற ஜாதகத்தை கண்டுபிடித்தபின் அந்த வரனின் படிப்பு வசதி , வேலை , தொலைவு , சமூக அந்தஸ்த்து , இதுபோன்ற காரணங்களால் பொருந்தாமல் போய்  விடுவதும் உண்டு. எனவே இது போன்ற சமுதாய காரணிகளை முன்னிறுத்தி தனது தேடுதலில் கிடைத்த ஜாதகங்களை ஜோதிடரிடம் கொண்டு சென்றால் அவர் ஒரே வரியில் இந்த ஜாதகம் எட்டில் கேது இல்லை எனவே பொருந்தாது என்பது போன்ற பதில்களை ஜோதிடர்கள் சொல்லும்போது ஏற்படும் மன வருத்தமானது சொல்லில் அடங்காது. ஒரு முறை திருமண தகவல் மையத்தில் ஜாதகம் தேர்ந்து எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் கூறிய  வார்த்தை இன்னும் காதில் ஒலித்துக்கொண்டு  உள்ளது.      " இந்த இடத்தில் ராகு இருக்கவேண்டும் அந்த இடத்தில் கேது இருக்க வேண்டும் என்பது போன்ற ஜோதிடர்களின் தகவலுடன் இங்கு வரனின் கோப்பை தேடும் பொது எதோ ஆங்கிலப் படத்தை புரியாமல் பார்ப்பது போன்று  உள்ளது  " என்ற அவரது வார்த்தை மிக மன வேதனை அடைந்து இருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது. 

                ஒரு வழியாக இந்த சோதனைகள் எல்லாம் முடிந்தபோது குறிப்பாக பெண் வீட்டாராக இருந்து விட்டால் இன்னும் சோதனை முடியவில்லை என்பது போன்று ஆகிவிடுகிறது. 

                                                                           

                       மேலே கொடுக்கப்பட்டுள்ள  உதாரண ஜாதகம் ஒரு மாப்பிள்ளை ஜாதகமாகும்  இதில் நடப்பு தசை ராகு தசை குரு புத்தி. இந்த ஜாதகத்தில் எட்டில் குரு செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. அயன சயன போகாதிபதியான குருவினுடைய புத்தியில் நிச்சயமாக திருமணம் நடந்துவிடும். அனால் இந்த குரு புத்தி சுமார் ஒரு வருடத்தில்  முடிந்துவிடும்.பின்னர், நடக்க போகும் சனிபுத்தியானது ஏழாமிடத்தில் வக்கிர கதியில் உள்ளது, பொதுவாக மூன்றாமிடத்தில் ராகுவோ அல்லது கேதுவோ தனிமையில் இருந்து திசை நடத்தும்போது அவர்களுக்கு அமைதியான அல்லது நிம்மதியான குடும்ப வாழ்க்கை கிடைப்பது இல்லை. எனவே இந்த உதாரண ஜாதகத்தில் குரு புத்தி முடிந்தவுடன் துவங்கும் சனி புத்தியானது நிச்சயமாக குடும்ப வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்கப் போகிறார். மேலும் ராகு சட்ட ரீதியான கிரகம் என்பதால் இவருடைய வாழ்க்கையில் குடும்ப பிரச்சனைகளுக்காக நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை ஏறவேண்டிய சூழ்நிலையை உருவாக வாய்ப்பு  உண்டு. 

                 ஆனால் நடப்பது என்ன ? இந்த மணமகனின் பெற்றோர்கள் தங்கள் வரனுக்கு ஐம்பது சரவன் நகை மற்றும் சீர்வரிசைகள் என்று தங்களது எதிர்பார்ப்பை கூறியுள்ளனர். இவ்வளவு நகை சீர் வரிசைகளுடன் வரும் ஒரு பெண் எவ்வாறு இந்த மாமியார் அல்லது மாமனாருக்கு அடிப்படை தேவைகள் மற்றும் சேவைகளை செய்வார். இந்த அளவு சீர் வரிசை செய்ய தகுதியுடைய பெற்றோர்கள் தங்களது மகளை எந்த அளவுக்கு படிக்க வைத்து இருப்பார், எந்த அளவுக்கு செல்லமாக வளர்த்து இருப்பார். எந்த வேலையும் செய்ய விடாமல் தனது மகளை படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த வைத்து இருப்பார். அடுத்த வீட்டுக்கு செல்லும் பெண்தானே அவள் இங்கு இருக்கும்வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று தந்து மனைவியையும் வேலை சொல்ல விடாமல் வைத்து வளர்த்திருப்பார். 

                          இவ்வளவு கேப்பிடேசன் பீஸ் கொடுத்து வந்துவிட்டு வேலையும் பார்த்து சம்பளத்தையும் கொடுத்துவிட்டு அடிமையாக இருக்க வேண்டும் என்பர். இங்கு தான் பிரச்னை விஸ்வருபம் எடுக்கிறது. எனவே பிரிவு என்பது தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் இந்த மாதிரி ஜாதகங்களை தெரிந்து எடுத்து விலக்குவது முக்கியமானதாகும். பத்து ரூபாயிக்கு கத்திரிக்காய் வாங்குவதையே அமுக்கி பார்த்து நசுக்கிப்பார்த்து வாங்கும் நாம் மாப்பிள்ளை தேர்ந்து எடுப்பதில் எந்த அளவு கவனமாக இருக்கவேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

                                                                      

Wednesday, March 26, 2014

சோதனை குழாய் குழந்தை பாக்கியம் கிடைக்குமா ? Test Tube Baby

                                                                               



                                         " குழல் இனிது யாழ் இனிது என்பர் தத்தம்
                                           மழலைச்சொல் கேளா தவர் "

                                                                                                           திருவள்ளுவர்


                      திருமணம் ஆகும் வரை எப்போது திருமணம் என்று கேட்பவர்களுக்கு பதிலே சொல்ல முடியவில்லை என்பர். இதனாலேயே மற்ற உறவினர்களின் விஷேசத்திற்கு செல்லாமல் தவிர்ப்பவர்கள் அநேகம் பேர். ஆயினும் திருமணம் முடிந்த கையேடு ஏதாவது விசேஷம் உண்டா? என்பதே பெரும்பாலும் அடுத்த கேள்வியாக இருக்கும். குழந்தை பாக்கியம் தள்ளி போவதால் அந்த தம்பதியர் கவலைப்படுகிறார்களோ இல்லையோ அடுத்தவர்கள் கேள்விமேல் கேள்வி கேட்டே கவலைப்பட வைத்துவிடுகிறார்கள் என்றால் அது மிகையல்ல .இந்த குழந்தை பாக்கியம் பற்றிய கேள்வியுடன் வந்த தம்பதியின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 " கற்றலின் கேட்டல் நன்று  "  என்பது முதுமொழி எனவே இந்த ஜாதகங்களுக்கான விளக்கவுரையை ஒளிக்காட்சியாக Video formate இணைத்துள்ளேன்.








Friday, February 28, 2014

இரண்டு மனைவிகள் அமையும் யோகம் யாருக்கு உள்ளது ?

                                                                                 

                                            சாதரணமாக இரண்டு மனைவி யோகம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்த யோகத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இதற்க்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


             பொதுவாகவே இரண்டாமிடம் அல்லது ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் இருப்பது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்புடையது அல்ல என்பது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.  இரண்டு மனைவி என்பதை எளிதாக காண இரண்டாமிடத்தில் ராகு பகவான் தனிமையில் இருந்து திசை நடத்தினால் அவருக்கு உறுதியாக இரு தாரம் அமைய வாய்ப்பு நூறு சதவிகிதம் உள்ளது. அதேபோல ராகு பகவான் மூன்றாமிடத்தில் தனிமையில் இருந்து திசை நடத்தினால் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை பெரும் போராட்டமாகவோ அல்லது உத்தியோகத்தின் நிமித்தம் கணவன் மனைவி இருவரும் தனி தனியே பிரிந்து வாழ்வதை அறுதியிட்டுக் கூறலாம்.

                    பின்வரும் இந்த உதாரண ஜாதகத்தைப் பார்க்கவும். இந்த ஜாதகத்தில் இரண்டாமிடமான கடகத்தில் இரண்டு பாவ கிரகங்கள் அமைந்துள்ளது, கேது பகவான் மற்றும் செவ்வாய் உள்ளது இந்த ஜாதகர் தனது முதல் மனைவி மூன்று குழந்தைகளுடன் இருக்கும்போதே இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையுடன் உள்ள  கைம் பெண்ணை  திருமணம் செய்துகொண்டார். இதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும். இரண்டாமிடத்ததிபதி ரூன ரோக சத்ரு ஸ்தானமான ஆறமிடத்து  அதிபதியான செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. இதனால் தனது முதல் மனைவியே இவருக்கு சத்ருவாகி காவல் துறை நீதிமன்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு காரண கர்த்தாவாகி விட்டார். ஆனாலும் பரிவர்த்தனை யோகத்தில் சந்திரன் ஆட்சியாவதால் திருமணமும் நடந்து மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகவும் ஆகிவிட்டார். இதற்க்கு புத்திர காரகன் குரு ஆட்சியாகி இருப்பதும் புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சியாகி இருப்பதும் சாதகமான சூழ்நிலையாகும். ஆயினும் இரண்டாமிடத்தில் உள்ள கேதுவும் இரண்டாம் அதிபதி சந்திரன் ஆறாமிடத்தில் இருப்பதும் இவருக்கு மனைவியே எதிரியாகவும் மாறுவதற்கு எதுவாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் இவருக்கு மிதுனம் உபய லக்னமாகும். உபய லக்னத்திற்கு  எழாமதிபதி பாதகதிபதியாகும்.இந்த எழாமிடத்து அதிபதி குரு பகவான் ஆட்சி பெற்று நிர்ப்பது மிக பாதகமான அமைப்பாகும். ஆக்சன் தான் நன்றாக இருக்குமே தவிர ஓவர் ஆக்சன்  நன்றாக இருக்காது. இங்கு குரு பகவான் ஆட்சி பெறுவது பாதகமான பலன்களையே செய்வார். அதிலும் குறிப்பாக ஏழாமிடமான மனைவி வழியாகவே அனைத்து சோதனைகளையும் கொடுப்பார் என்பதே விதியாகும். இதன் காரணமாகவே நீதிமன்றத்தின் நெடிய படிகளில் இந்த குடும்பத்தை ஏற வைத்து விட்டது. பதினொன்றாமிடத்து அதிபதியான செவ்வாய் பரிவர்த்தனையில் ஆச்சியாவது மறு திருமணத்தை குறிக்கிறது. இந்த செவ்வாய் கேதுவுடன் இணைவது கைம் பெண்ணை மறுமணம் செய்வதை குறிக்கிறது.  அதுவும் ஒரு காதல் திருமணமாகவே அமைந்தது, இந்த திருமணத்தில் இந்த ஜாதகருக்கு கிடைத்த மன நிம்மதி என்பது அளவுகடந்தது. அந்த அளவுக்கு இரண்டாமிட கேது செவ்வாய் மற்றும் ஏழாமிட தனித்த குரு இந்த ஜாதகரை மிக வலுவாக சிரமப்படுத்திவிட்டார் என்றால் அது மிகையல்ல. உபய லக்னத்திற்கு  ஏழாமிடத்தில் பாதகாதிபதி வலு பெறுவது என்பது இருதார யோகத்தையே குறிக்கிறது. இதேபோல மீனம் மற்றும் தனுசு லக்னத்திற்கும் இவை இரண்டும் உபய லக்னமாகும், புதன் ஏழாமிடத்தில் ஆட்சி பெறுவது இருதார யோகத்தையே குறிக்கிறது.




ஓம் நமோ நாராயணாய நமஹ !!

Saturday, February 1, 2014

சகோதரன் இல்லாமல் இருப்பது எதனால் ?



                          சிலருக்கு சகோதரன் இல்லாமல் பெண் குழந்தைகள் மட்டும் இருப்பதன் காரணம் என்ன ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம். ஜாதக கட்டத்தில் சகோதர காரகன் என்பது செவ்வாயைக் குறிக்கும், அதே போல சகோதர ஸ்தானம் என்பது மூத்தோருக்கு பதினொன்றாம் இடமும் இளைய சகோதரத்திற்கு மூன்றாம் இடத்தையும் குறிக்கும். இதில் செவ்வாய் இருந்ததால் சகோதரன் இருப்பது இல்லை. இதில் மூன்றாமிடத்தில் செவ்வாய் இருந்தால் இளைய சகோதரன் வாய்ப்பது  இல்லை.அதேபோல பதினொன்றாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரன் இருப்பது இல்லை. அதையும் மீறி சகோதரன் இருந்தால் அவர்களும் சிரமப்பட்டு இருப்பவர்களையும் சிரமத்தில் கொண்டு விட்டுவிடுகிறார்கள்

                          பிருகு சூத்திரத்தில் சொன்னபடி " காரக கிரகம் காரக ஸ்தானத்தில் நிற்பது தவறு " என்ற விதியோடு ஒத்து போகிறது. இதையே ஜாதக அலங்காரத்தில்

                 "  சோதர காரகன் சோதர நாயகன் ற்றுட்ட
                          வட்டமங்கள் கூடி நிற்க சோதரம் சொப்பனம் கிட்டாதே.  "


                        என்று கூறுகிறது, சகோதர ஸ்தானதிபதியும் ( மூன்றாமிடத்ததிபதி அல்லது பதினொன்றாம் வீட்டதிபதியும் )  சகோதர காரகனான செவ்வாயும் ஆறு எட்டு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நின்றால் அந்த ஜாதகர்களுக்கு சகோதரன் என்பது கனவிலும் கிட்டாது என்று உறுதியாக கூறுகிறது.

                                         பின்வரும் உதாரண ஜாதகத்தில் ஒரு மூத்த சகோதரன் இருந்து தனது பதிமூன்றாம் அகவையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.  இந்த ஜாதகத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் மூத்த சகோதர ஸ்தான அதிபதியான சந்திரனுடன் சகோதர காரகன் செவ்வாய் சேர்ந்து விரைய ஸ்தானம் என்னும் பன்னிரெண்டாமிடமான சிம்மத்தில் மறைந்து உள்ளது. இதனால் ஏற்ப்பட்ட சகோதர தோஷமே தனது அண்ணனை இழக்க நேரிட்டது.